சிவகாசி, ஜூலை 1: சிவகாசி பிச்சாண்டி தெருவை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன்(31). இவரும் இவரது மனைவி ஜெனிபரும் டூவீலரில் சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினிபஸ் மோதி 2 பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 2 பேருக்கும் சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து மினிபஸ் டிரைவர் பொன்செல்வம் மீது சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மினி பஸ் மோதியதில் தம்பதி படுகாயம் appeared first on Dinakaran.
