×

மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு

அரூர், மே 6: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், 42வது வணிகர் தின மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி, அரூர் பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் அனைவரும் மதுராந்தகம் புறப்பட்டுச் சென்றதால், அரூர் கடை வீதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதிகளிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கடையடைப்பு குறித்து தெரியாமல், அரூர் கடைவீதிக்கு வந்த சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள், கடைகள் அடைக்கப்பட்டிருப்பதை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதேபோல், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், நல்லம்பள்ளி, தொப்பூர், கடத்தூர், கடகத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

The post மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Aroor ,42nd Traders' Day Conference ,Madhurantakam ,Chengalpattu ,Tamil Nadu Traders' Association ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...