×

மார்க்சிஸ்ட் கம்யூ.மாநாடு

திருச்செங்கோடு, செப்.26: திருச்செங்கோடு நகரத்திற்கு உட்பட்ட கொல்லப்பட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு திருச்செங்கோடு நகர அலுவலகத்தில் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. கிளையின் புதிய செயலாளராக அரசு தேர்ந்தெடுக்கப்பட்டார். கந்தசாமி, வீரமணி, குமரவேல், வெங்கடேஷ், ஜெயமணி, நகர செயலாளர் ராயப்பன் ஆகியோர் பேசினர். மாநாட்டில், கொல்லப்பட்டி அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக கடையை அகற்ற வேண்டும். கொல்லப்பட்டியில் பயன்பாட்டில் இல்லாத பொதுக்கிணற்றை தூய்மை செய்து, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். கொல்லப்பட்டி பஸ் நிறுத்தத்திற்கு பயணிகள் நிழற்கூடம் அமைத்து தர வேண்டும். பொதுக்கழிப்பிடத்தை சுத்தம் செய்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post மார்க்சிஸ்ட் கம்யூ.மாநாடு appeared first on Dinakaran.

Tags : Marxist Commune Conference ,Tiruchengode ,Communist Party of Kurdistan ,Kandasamy ,Veeramani ,Kumaravel ,Venkatesh ,Jayamani ,City Secretary ,Rayappan ,Marxist Communist Conference ,Dinakaran ,
× RELATED ₹3.75 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை