×

மாநில அளவிலான கபடி போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

 

நாகப்பட்டினம்,செப்.18: நாகப்பட்டினம் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.  இதில் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில் திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து தமிழ்நாடு மாநில அளவிலான கபடி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் குமார், உதவி தலைமை ஆசிரியர் சுகுமாறன் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அன்பானந்தம், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் தியாகராஜன் ,பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கவிதா, ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post மாநில அளவிலான கபடி போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : NAGAPATTINAM ,NAGAPATTINAM DISTRICT-LEVEL SPORTS COMPETITION ,NAGORE NATIONAL HIGH SCHOOL ,Thirukanapuram Government High School ,Kabadi Competition ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினத்தில் பெரியார் பிறந்தநாள் விழா