சிவகாசி, ஜூலை 1: சிவகாசி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்தார்.
சிவகாசி அருகே பள்ளபட்டிரோடு முருகன் காலனியை சேர்ந்தவர் வைரம் மகன் ஜேப்பி(30). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வைரம் மற்றும் அவரது மகன் ஜேப்பி ஆகிய இருவரும் அதே பகுதியில் வசித்து வரும் ஜாக்சன் என்பவரின் வீட்டில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஜேப்பி மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் காயம் அடைந்த நிலையில் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மாடியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி appeared first on Dinakaran.
