×

மதுபானம் வாங்க பணம் தர மறுத்ததால் ஆத்திரம் தந்தையை போதையில் கத்தியால் குத்தி கொன்ற மகன்: சூளைமேட்டில் நள்ளிரவு பரபரப்பு

சென்னை, மார்ச் 18: மதுபானம் வாங்க பணம் தர மறுத்த தந்தையை போதையில் இருந்த மகன் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் சூளைமேடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை சூளைமேடு வீரபாண்டி நகரை சேர்ந்தவர் செல்வம்(55). இவர் செங்குன்றத்தில் லைனிங் ஓர்க்ஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பிரகாஷ் தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். இளையமகன் நித்தியானந்தன் (29) தனது தந்தை செல்வத்துடன் வசித்து வருகிறார். ஏசி மெக்கானிக்கான நித்யானந்தன் சரியாக வேலைக்கு செல்லாமல் எப்போதும் மது போதைக்கு அடிமையாக ஊதாரியாக சுற்றி வந்துள்ளார். குடிக்க பணம் கேட்டு தனது தந்தை செல்வத்திடம் நித்தியானந்தன் தினமும் தகராறு செய்து பணம் வாங்கி செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த செல்வத்திடம், நித்தியானந்தன் மது வாங்க பணம் கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு செல்வம் தன்னிடம் தற்போது பணம் இல்லை என்று கூறி, இதுபோல் குடித்து கொண்டு இருந்தால் உனக்கு யார் பெண் கொடுப்பார்கள் என்று கூறி மகனை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் தந்தை மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு நித்தியானந்தன் வெளியே சென்று விட்டார்.பின்னர் நள்ளிரவு 11 மணிக்கு குடிபோதையில் வீட்டிற்கு வந்த நித்தியானந்தன், குடிபோதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மீண்டும் அவரது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த நித்தியானந்தன் மறைத்து வைத்திருந்த பட்டன் கத்தியை எடுத்து செல்வத்தை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.செல்வத்தின் அலறலை கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செல்வத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிறிது நேரத்திலயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, குடிபோதையில் இருந்த மகன் நித்தியானந்தனை கைது செய்தனர். …

The post மதுபானம் வாங்க பணம் தர மறுத்ததால் ஆத்திரம் தந்தையை போதையில் கத்தியால் குத்தி கொன்ற மகன்: சூளைமேட்டில் நள்ளிரவு பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Choolaimet ,Chennai ,Chulaimet ,
× RELATED பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை...