×

போலி சாமியார் போக்சோவில் கைது

 

திருப்பரங்குன்றம், ஜூலை 29: மதுரையில் போக்சோ வழக்கில் போலி சாமியார் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை, திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார்(63). இவரை இப்பகுதி மக்கள் சாமியார் என அழைப்பார்கள். அவரிடம் நல்ல காரியங்களுக்கு நாள் கேட்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுவர். இப்பகுதி குழந்தைகள் இவரை சாமியார் தாத்தா என அழைப்பதுடன், அவரது வீட்டிற்கும் சென்று வருவர்.

இந்நிலையில் இவர், 10ம் வகுப்பு மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில், பெற்றோர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், போலி சாமியார் மனோஜ்குமாரை கைது செய்தனர்.

The post போலி சாமியார் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Bokso ,Thiruparangunram ,POCSO ,Madurai ,Manoj Kumar ,Tiruparangundra, Madurai ,Pokso ,
× RELATED மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அரசு...