×

பாலங்களில் வர்ணம் பூசும் பணி மும்முரம்

பரமக்குடி,ஆக.15:பரமக்குடி நெடுஞ்சாலை உட்கோட்டத்தின் சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறிய பாலங்களில் வர்ணம் பூசும் பணி நடைபெற்றது. தமிழக முழுவதும் நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட பாலங்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வர்ணம் பூச வேண்டும் என நெடுஞ்சாலை துறை சார்பாக மாவட்ட நெடுஞ்சாலை துறை கோட்டங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, பரமக்குடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட சிறிய பாலங்களில் வர்ணம் பூசும் பணியில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியினை பரமக்குடி உதவி கோட்ட பொறியாளர் கண்ணன் பார்வையிட்டார். அப்போது உதவி பொறியாளர் பிரபாகரன், சாலை ஆய்வாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட நெடுஞ்சாலைத் துறையின உடன் இருந்தனர்.

The post பாலங்களில் வர்ணம் பூசும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : PARAMAKUDI ,HIGHWAY FOUNDATION ,Highways Department ,Highway Department ,Independence Day ,Tamil Nadu ,
× RELATED சமுதாயக்கூடம் திறப்பு