×

தேசிய அளவிலான கேரம் போட்டிக்கு கோத்தகிரி பள்ளி மாணவர் தேர்வு

 

ஊட்டி, ஜூலை 16: திருவண்ணாமலையில் நடந்த மாநில அளவிலான கேரம் போட்டியில் கோத்தகிரி பள்ளி மாணவர் மூன்று இடம் பிடித்து தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். கீழ்கோத்தகிரி அவ்வூர் பகுதியை சேர்ந்த ஆசிரியர் நல்லமுத்துவின் மகன் ரெணோ. இவர், அவ்வூர் அரசு துவக்கப்பள்ளியில் சிறு வயது முதல் கேரம் விளையாட்டில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். இந்நிலையில், தற்போது கோத்தகிரி ஐசிஎஸ் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் இவர், மாநில அளவில் திருவண்ணாமலையில் நடந்த கேரம் போட்டியில் கலந்துக் கொண்டு விளையாடினார்.

இதில், மூன்றாம் இடம் பிடித்த இவர் உத்தரப்பிரதேசம் கான்பூரில் நடக்கும் தேசிய அளவிலான கேரம் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்நிலையில், மாநில அளவிலான போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து பரிசுகளை வென்ற நிலையில், அவரை மாவட்ட கலெக்டர் அருணா ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா மற்றும் பயிற்சியாளர் அசேகாக் ஆகியார் உடன் இருந்தனர்.

The post தேசிய அளவிலான கேரம் போட்டிக்கு கோத்தகிரி பள்ளி மாணவர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Kothagiri ,Tiruvannamalai ,Reno ,Nallamuthu ,Kilikottagiri Avvoor ,
× RELATED கோத்தகிரியில் பகலில் வளர்ப்பு நாயை...