×

துல்லிய வானிலை,வெள்ள கணிப்புக்கு தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தல்

டெல்லி: துல்லிய வானிலை மற்றும் வெள்ள கணிப்பை தெரிவிக்கும் விதமாக தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். எதிர் வரும் பருவமழை காலத்தை முன்னிட்டு வெள்ள தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர்  அமித்ஷா அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வில் வெள்ளம் தொடர்பான பிரச்சனைகளை களைய  நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் வகுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்பொழுது துல்லிய வானிலை மற்றும் வெள்ளக் கணிப்பை வழங்கும் விதமாக தொழில்நுட்பத்தை தரம் உயர்த்த இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் ஒன்றிய நீர் ஆணையத்தை உள்துறை அமைச்சர் அமைச்சர் கேட்டுக்கொண்டார். கனமழையால் ஏற்படக் கூடிய பகுதிகளில் மழை முன்னெச்சரிக்கை வழங்குவது குறித்து மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குமாறு தேசிய பேரிடர் மீட்பு படைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தி உள்ளார்….

The post துல்லிய வானிலை,வெள்ள கணிப்புக்கு தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Union Home Minister ,Amit Shah ,Delhi ,
× RELATED தீவிரவாதம் புதைக்கப்பட்டு விட்டது...