×

திருச்சியில் தொழிலதிபரிடம் நிலமோசடி செய்த 20 பேர் மீது வழக்கு

திருச்சி, ஆக.14: திருச்சியில் தொழிலதிபரிடம் பல கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக அளித்த புகாரின் பேரில் 20க்கும் மேற்பட்டோர் மீது மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். இவருக்கு சொந்தமாக திருச்சி கண்டோன் மென்ட் ஸ்டேட் பாங்க் ஆபிஸர்ஸ் காலனி பகுதியில் 3 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தை வீட்டு மனையாகப் பிரித்து ₹.17 கோடியே 62 லட்சத்து 71 ஆயிரத்து 170 ரூபாய்க்கு விற்பனை செய்ய திருச்சியை சேர்ந்த சிலருக்கு கடந்த 2009-2010 ஆண்டுகளில் அவர் பவர் பத்திரம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் குறிப்பிட்ட சிலர் முதற்கட்டமாக ₹.1.75 கோடி முன்பணம் கொடுத்து உள்ளனர். அதன் பின்னர் அந்த நிலத்தை பல கோடிகளுக்கு விற்பனை செய்து, உரிய தொகையை வழங்காமல் ரங்கராஜை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. தற்போது ரங்கராஜ் இறந்துவிட்ட நிலையில் அவரது மகன் சந்திரமோகன் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் 20 க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருச்சியில் தொழிலதிபரிடம் நிலமோசடி செய்த 20 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Ramanathan Street ,Kilpakkam, Chennai ,Dinakaran ,
× RELATED விதிமீறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகராட்சிக்கு ஆணை