×

தா.பழூர் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை கூட்டம்

 

தா.பழூர், ஜூன் 28: தா.பழூர் அருகே உள்ள அருள்மொழி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ராமமூர்த்தி தலைமை வகித்தார். இதில், பெரியசாமி, ரமேஷ், ராமமூர்த்தி, கரிகாலன், முருகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒன்றிய செயலாளர் முருகேஸ்வரி மாவட்ட மாநாட்டு பேரணி பற்றியும், ஒன்றிய பொருளாளர் கரிகாலன் அரசியலை பற்றியும் விளக்கி பேசினர். ராமமூர்த்தி கிளை செயலாளராகவும், பெரியசாமி துணை செயலாளராகவும் ரமேஷ் பொருளாளராகவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். அப்போது, தார் சாலையின் இருபுறமும் வடிகால் வசதி செய்து தர வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post தா.பழூர் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Communist Party of India ,Tha.Pazhur. ,Tha.Pazhur ,Arulmozhi ,Ramamoorthy ,Periyasamy ,Ramesh ,Karikalan ,Murugeswari ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...