×

தஞ்சையில் மக்கள் குறை தீர்நாள் கூட்டம்

 

தஞ்சாவூர் ஆக.20: தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நேற்று நடைபெற்றது.தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம். கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 432 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கொள்ளுமாறு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார்.மேலும், மாற்றுத்திறனாளின் நலத்துறை சார்பில் பார்வையற்ற கல்லூரியில் பயிலும் மாணவிக்கு வாசிப்பு திறன் மேம்படுத்தும் டெய்சி பிளேயர் கருவியினை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார் மற்றும் அனைத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தஞ்சையில் மக்கள் குறை தீர்நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,People's Grievance Resolution Day ,Thanjavur district ,District Collector ,Priyanka Pankaj ,Priyanka Bhankam ,Tanjavur District Collector ,Office ,Partnership ,Lai Durdan Meeting of People in Refuge ,
× RELATED கும்பகோணத்தில் பயங்கரம் மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கொடூர கணவர்