×

டாஸ்மாக் கடைகளை இன்று மூட உத்தரவு

தர்மபுரி, ஆக.15: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தர்மபுரி மாவட்டத்தில் இன்று (15ம் தேதி) சுதந்திர தின விழாவையொட்டி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள், முன்னாள் படைவீரர் மது விற்பனைக்கூடம் அனைத்தும் 14ம் தேதி இரவு 10 மணி முதல், நாளை (16ம் தேதி) காலை 12 மணி வரை, மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க வேண்டும். மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ, சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post டாஸ்மாக் கடைகளை இன்று மூட உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Dharmapuri ,Dharmapuri District ,Collector ,Shanti ,Independence Day ,Tamil Nadu State Chamber of Commerce ,Dinakaran ,
× RELATED கணவனை கடத்தி சித்ரவதை செய்து கொன்ற மனைவி? கள்ளக்காதல் விவகாரமா