×

ஜூலை 9ல் மக்கள் தொடர்பு முகாம்

 

சிவகங்கை, ஜூலை 4: சிங்கம்புணரி அருகே குளத்துப்பட்டி கிராமத்தில் ஜூலை 9 அன்று மக்கள் தொடர்பு முகாம் நடக்க உள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிங்கம்புணரி தாலுகா, குளத்துப்பட்டி கிராமத்தில், ஜூலை 9 அன்று காலை 10 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. அரசுத் துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, தகுதி வாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே முகாமின் நோக்கமாகும். எனவே, மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு, பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

The post ஜூலை 9ல் மக்கள் தொடர்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Public Relations ,Camp ,Sivaganga ,Kulathupatti ,Singampunari ,Collector ,Porkodi ,Singampunari taluka ,Public Relations Camp ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...