×

சென்னை உட்பட முக்கிய நகரங்களில் ஈரானிய கொள்ளையர்கள் மீண்டும் கைவரிசை

சென்னை: சென்னையில் கடந்த 10 நாட்களில் 4 இடங்களில் பெண்களின் கவனத்தை திசை திருப்பி ஈரானிய கொள்ளையர்கள் 50 சவரன் தங்க நகைகளை திருடி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய கொள்ளையர்கள் சென்னை உட்பட முக்கிய நகரங்களில் தொடர்ச்சியாக நூதன திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். முதியோரை மட்டுமே குறிவைத்து அவர்களுக்கு உதவி செய்வது போல நடித்து நூதன கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.தனியே செல்லும் பெண்களிடம் போலீஸ் என அறிமுகம் செய்துகொண்டு கலவரம் நடப்பதாக நகைகளை தாளில் மடித்து தருவதாக கூறி கற்களை கட்டிக்கொடுத்து ஈரானிய கொள்ளையர்கள் ஏமாற்றி வருவது அம்பலமாகியுள்ளது. கடந்த 12ஆம் தேதி விருகம்பாக்கத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான பிரேமகுமாரி, கே.கே நகர் 65வது தெருவை சேர்ந்த மூதாட்டி அலமேலு, அசோக் நகரை சேர்ந்த மூதாட்டி தனலெட்சுமி, கொளத்தூரை சேர்ந்த மூதாட்டி சாரதா ஆகியோரிடம் நகைகளை திருடி சென்ற புகார்கள் காவல் நிலையத்தில் பதிவாகி இருக்கின்றன. இதற்கு முன்பு 2013ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சென்னையில் ஈரானிய கொள்ளையர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டனர்….

The post சென்னை உட்பட முக்கிய நகரங்களில் ஈரானிய கொள்ளையர்கள் மீண்டும் கைவரிசை appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை...