×

சென்னையில் மழைநீர் சூழ்ந்த சாலைகள், சுரங்கப்பாதைகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னை: சென்னையில் கடுமையான மழை பெய்து வருவதால் நெடுஞ்சாலைகளும், சுரங்க பாதைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் ஆய்வு செய்தார். சென்னை பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை அமைந்துள்ள ரேடியல் சாலை வழியாக ஆய்வு பணியை மேற்கொண்டு பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலையில் அமைந்துள்ள 16 பாலங்களையும், சிறு பாலங்களையும் ஆய்வு செய்தார். இதையடுத்து கங்கா நகர் பகுதியில் உள்ள சுரங்க பாதையில் தண்ணீர் தேங்காமல் உடனுக்குடன் மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்படுவதை ஆய்வு செய்தார். மழைநீரை வெளியேற்றும் மின் மோட்டார் திறம்பட செயல்படுகிறதா என்பதை பொறியாளர்கள் மூலம் ஆய்வு செய்ய உத்தரவிட்டார்….

The post சென்னையில் மழைநீர் சூழ்ந்த சாலைகள், சுரங்கப்பாதைகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,A. V. Velu ,Chennai ,
× RELATED தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தொடர்பாக...