×

சிவகிரி அருகே வாலிபர் தற்கொலை

சிவகிரி, செப்.18: சிவகிரி சிவராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் சின்னத்தம்பி (24). சிங்கப்பூரில் பணியாற்றி வந்த இவர் கடந்த 13ம்தேதி சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 15ம்தேதி உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்த சின்னத்தம்பி, தனக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்க பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள், சகோதரர்களுக்கு முடித்த பின்னர் பார்ப்போம் என கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த சின்னதம்பி தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

The post சிவகிரி அருகே வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Sivagiri ,Madasamy Makan Chinnathambi ,Sivagiri Sivaramalingapuram ,Singapore ,Chinnathambi ,
× RELATED சிவகிரியில் விதிகளை மீறி குளத்தில் மண் அள்ளி செங்கல் சூளைகளுக்கு விற்பனை