×

கொலை வழக்கில் கைதானவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் மனு

புதுக்கோட்டை, ஜூலை 2: புதுக்கோட்டை அருகே பெண்ணை திட்டமிட்டு கொலை செய்த நபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மாவட்ட கலெக்டரிடம் கொலை குற்றவாளி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனு ஒன்றை அளித்தனர். அப்போது அந்த மனுவில், தங்கள் கிராமத்தில் பல சமூகங்களை சார்ந்த மக்கள் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தங்கள் கிராமத்தை சேர்ந்த பெரியநாயகி என்ற பெண்ணை, செல்வமணி என்பவர் முன்னோக்கத்துடன் திட்டமிட்டு படுகொலை செய்தார். தற்போது கொலை குற்றவாளி சிறையில் இருந்து வரும் நிலையில் இந்த படுகொலை சம்பவத்தால் தங்கள் கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

கூலிப்படையுடன் தொடர்புடைய கொலை குற்றவாளியான செல்வமணி தற்போது ஜாமீனில் வெளிவர முயற்சிப்பதாகவும், இதனால் தங்கள் கிராமத்தை சேர்ந்த மக்களின் உயிருக்கும் உரிமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. மேலும் இதனால் சமுதாய ரீதியான பிரச்சனைகள் ஏற்படலாம்.
எனவே மாவட்ட கலெக்டர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கொலை குற்றவாளி செல்வமணியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

The post கொலை வழக்கில் கைதானவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் மனு appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Poongudi, Pudukottai ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில்...