×

குழாய் உடைப்பால் சாலையில் தேங்கிய குடிநீர்

ஓசூர், ஜூலை 7: ஓசூர் அருகே ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பால் குடிநீர் சாலையில் தேங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் -கெலமங்கலம் சாலை, ஜொனபெண்டா பஸ் நிறுத்தம் அருகே ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை திடீரென குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது. சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு பெருக்கெடுத்தவாறு தேங்கியது. இதுகுறித்து வாகன ஓட்டிகள், ஓசூர் மாநகராட்சி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குழாய் உடைப்பால் சாலையில் தேங்கிய குடிநீர் appeared first on Dinakaran.

Tags : Hosoor ,Okanagan ,Krishnagiri District ,Hosur-Kelamangalam Road ,Jonapenda Bus Stand ,
× RELATED பர்கூர் மலைப்பகுதியில் 7 குழந்தைகளின் தந்தைக்கு நவீன கருத்தடை சிகிச்சை