×

கிருஷ்ணா நகரில் கூட்டுறவு சங்க கிளை திறப்பு

தூத்துக்குடி, செப். 19: கிருஷ்ணா நகரில் கூட்டுறவு கடன் சங்க கிளை திறப்பு விழா நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் மானிய கோரிக்கையில் அறிவித்துள்ளதன்படி மற்றும் கூட்டுறவு சங்க பதிவாளர் அறிவுரைப்படி மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகையில் கே.மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. கோவில்பட்டி சரக துணை பதிவாளர் ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சங்க செயலாட்சியர் தமிழ்ச்செல்வன், கூட்டுறவு சார்பதிவாளர் அக்னிமுத்துராஜ், செல்வக்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கோவில்பட்டி கள மேலாளர் சுப்பையா பாண்டியன் மற்றும் சங்க செயலாளர் வேல்ராஜன், சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post கிருஷ்ணா நகரில் கூட்டுறவு சங்க கிளை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Co-operative Society Branch ,Krishna Nagar ,Thoothukudi ,Credit Union ,Minister ,Cooperatives ,Registrar ,Cooperative Societies Maniachi Primary Agriculture Cooperative Credit Society Krishna Nagar ,Cooperative Society Branch ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணி