×

கால்நடைகளுக்கு ஆக.30 வரை தோல் கழலை நோய் தடுப்பூசி

 

சிவகங்கை, ஆக.12: மாடுகளுக்கு பருவ மழை காலத்தில் ஏற்படும் தோல் கழலை நோய் தடுப்பூசி ஆக.30 வரை போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:பசு மாடுகளுக்கு பருவ மழை காலத்தில் ஏற்படும் தோல் கழலை நோய் வருடாந்திர பூஸ்டர் தடுப்பூசி ஆக.30ம் தேதி வரை மாவட்ட எல்லைப்புற கிராமங்களிலும், நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வளர்க்கப்படும் பசுக்கள், காளைகள், வண்டி மாடுகள் மற்றும் நான்கு மாத வயதிற்கு மேற்பட்ட கன்றுகளுக்கு போடப்படும். இந்நோயானது பசுக்களையே குறிப்பாகத் தாக்குகிறது.

நோய் தாக்கம் ஏற்பட்ட பசுக்கள் அதிக காய்ச்சல், இரை உண்ணாது இருத்தல், தண்ணீர் மிகக் குறைவாக அருந்துதல் போன்ற அறிகுறிகளோடு மிகவும் சோர்வாக காணப்படும். நோய் கண்ட பசுக்களின் தோலின் மேல் சிறு கொப்புளங்கள் போல் வட்ட வடிவில் தடிப்புகளோ, புண்களோ ஏற்படும். இந்நோய் கால்நடைகளைத் தாக்காத வண்ணம் கால்நடை வளர்ப்போர்கள் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி தடுப்பூசி போட்டு கால்நடைகளை பாதுகாத்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post கால்நடைகளுக்கு ஆக.30 வரை தோல் கழலை நோய் தடுப்பூசி appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Collector ,Asha Ajit ,Dinakaran ,
× RELATED மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது