×

காலை உணவு திட்டத்தில் 61,735 பேர் பயன்

தஞ்சாவூர், ஆக. 14: தஞ்சாவூர் மாவட்டத்தில் 1228 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் 61,735 பேர் பயன் அடைகின்றனர் என்று கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.09.2022 அன்று ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலக்கூடிய அனைத்து மாணவ, மாணவியருக்கும் காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கி வைத்து, மாணவர்களுடன் உணவருந்தினார். அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் 1,087 பள்ளிகள் 50,865 தொடக்கப்பள்ளி மாணவர்களும், நகர்புற பகுதிகளில் 62 பள்ளிகளில் 5,158 துவக்கப்பள்ளி மாணவ-மாணவியர் என மொத்தம் 1,149 பள்ளிகளில் 56,023 துவக்கப் பள்ளி மாணவ மாணவியர் இத்திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர்.
தற்போது, கடந்த 15.07.2024 அன்று விரிவுப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 141 அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10,870 மாணவ, மாணவியர் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றனர் என்றார்.

இத்திட்டத்தில் பயனடைந்த பயனாளிகள் குறித்து திருக்கானூர்பட்டி தூயமரியன்னை அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை குளோரியா கூறியதாவது:
எமது பள்ளியில் ஆண்கள் 69 பேர் பெண்கள் 72 பேர் மொத்தம் 141 பேர் காலை உணவு சாப்பிடுகிறார்கள். இத்திட்டத்தின்படி, பிள்ளைகள் பள்ளியில் காலை உணவு சாப்பிடுவது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வேலைக்கு செல்லும் பெற்றோர் காலையில் டீ, பிஸ்கட் மட்டும் கொடுத்துவிட்டு பள்ளிக்கு வருவார்கள்.

தற்போது, காலை உணவுத் திட்டத்தால் மாணவ-மாணவியர்கள் அனைவரும் சாப்பிடுகிறார்கள். படிப்பில் பசியின்றி முழுகவனம் செலுத்துகிறார்கள். சிறப்பான இத்திட்டம் தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.

மாதாக்கோட்டை தூயமரியன்னை அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மரியன்னாவிர்ஜூன் கூறியதாவது. ‘எமது பள்ளியில் ஆண்கள் 98, பெண்கள் 69 மொத்தம் 167 பேர் காலை உணவு சாப்பிடுகிறார்கள். வேலைக்குப் போகும் பெற்றோர் இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். வீட்டில் சாப்பிடாமலேயே பள்ளிக்கு வருகிற பிள்ளைகள் தற்போது காலை உணவுத் திட்டத்தால் சத்தான உணவினை சாப்பிடுகிறார்கள். கல்விப்புரட்சியில் சிறந்த திட்டத்தை தந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மிகவும் நன்றி எனத் தெரிவித்தார்கள்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் பயன்பெறும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் திருமதி.அபிதா. திருமதி.சுசீலா. திருமதி.ஜான்சிராணி மோசஸ் ஆகியோர் காலை உணவுத் திட்டத்தால் பிள்ளைகளுக்கு சாப்பாடு தந்து பசிப்பிணி போக்கிய முதலமைச்சர் நீடுழி வாழ வேண்டும். இத்திட்டத்தை, தந்த முதல்வருக்கும். தமிழக அரசுக்கும் நன்றி என்றார்.

இவ்வாறு, தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

The post காலை உணவு திட்டத்தில் 61,735 பேர் பயன் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Collector ,Priyanka Pankajam ,Chief Minister ,Tamil Nadu ,M. K. Stalin ,
× RELATED மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு...