×

காட்டுப்பன்றியால் நடந்த விபத்தில் சிக்கிய பெண் பலி

திருமங்கலம், ஏப். 25: கள்ளிக்குடி அருகேயுள்ள எஸ்.கிருஷ்ணாபுரத்தினை சேர்ந்தவர் மூவேந்திரன்(35) கட்டித்தொழிலாளி. இவரது மனைவி சீதாலட்சுமி(30). இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 10ம் தேதி இருவரும் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்ற உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்றுவிட்டு அதிகாலையில் ஊருக்கு டூவீலரில் திரும்பினர். கள்ளிக்குடி அருகே சென்னம்பட்டி – இடையபட்டி ரோட்டில் திடீரென குறுக்கே வந்த காட்டுப்பன்றி மீது அவர்களின் டூவீலர் மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்த இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீதாலட்சுமி நேற்று முன்தினம் உயிரிழந்தார். மூவேந்திரனுக்கு சிகிச்சை தொடர்கிறது. விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post காட்டுப்பன்றியால் நடந்த விபத்தில் சிக்கிய பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Movendran ,S. Krishnapuram ,Kallikudi ,Seethalakshmi ,Vembakottai, Virudhunagar district ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...