×

கல்லக்குடி திரெளபதி அம்மன் கோயில் தேரோட்ட திருவிழா: திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

லால்குடி, ஜூன் 12: லால்குடி அருகே கல்லக்குடி திரெளபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர். திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் திரௌபதி அம்மனின் திருவிழாவையொட்டி கடந்த 10ம்தேதி தீமிதி திருவிழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடனை நிறைவு செய்தனர். முன்னதாக சித்திரை மாதம் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் 21 நாட்கள் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. தொடர்ந்து நிறைவு நாளான கடந்த 10ம்தேதி 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழியில் தீ மிதித்து நேர்த்திகடனை நிறைவு செய்தனர்.

நேற்று முன்தினம் காலை திரவுபதி அம்மன் சிலை தாங்கிய தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.,சுற்றுவட்டார பொது மக்கள் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து நேற்று இரவு வாண வேடிக்கையுடன் பல்லாக்கு திருவீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து இன்று (ஜூன் 12) வியாழக்கிழமை மதியம் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிராம பட்டையதார்கள், முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

The post கல்லக்குடி திரெளபதி அம்மன் கோயில் தேரோட்ட திருவிழா: திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர் appeared first on Dinakaran.

Tags : Kallakudi Thirupathi Amman Temple Chariot Festival ,Lalgudi ,Kallakudi Thirupathi Amman Temple festival ,Thimithi festival ,Draupadi Amman festival ,Kallakudi, Trichy district ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் சதுரங்க பயிற்சி முகாம்