×

ஏரியில் மண் அள்ளிய பொக்லைன் பறிமுதல்

 

காரிமங்கலம், மே 30: காரிமங்கலம் ஒன்றியம், பேகாரஅள்ளி பஞ்சாயத்து சுண்ணாம்பட்டி கிராமத்தில் உள்ள ஏரியில், சட்ட விரோதமாக மண் திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து பொதுமக்களின் தொடர்ச்சியான புகாரையடுத்து, வருவாய் துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை, அந்த பகுதியில் திடீர் ரோந்து சென்றனர். அப்போது, ஏரி பகுதியில் மண் திருட்டில் ஈடுபட்டவர்கள், அதிகாரிகளை கண்டதும் வாகனங்களுடன் ஓட்டம் பிடித்தனர். ஏரி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அருள் என்பவருக்கு சொந்தமான பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்த வருவாய்துறையினர், காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஆர்ஐ வடிவேல் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post ஏரியில் மண் அள்ளிய பொக்லைன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சமயபுரம் டோல்கேட்டில் வடக்கு மாவட்ட...