×

எம்பிக்கள் இடைநீக்கம் கண்டித்து திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

 

திருச்சி, டிச.24: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு, இந்தியா கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட 142 பாராளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ததை கண்டித்து நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) காலை நம்பர்-1 டோல்கேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருச்சி கலை தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் புள்ளம்பாடி ஜெயபிரகாஷ், ஜான் அசோக், இளையராஜா மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், காங்கிரசின் துணை அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

The post எம்பிக்கள் இடைநீக்கம் கண்டித்து திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Trichy North District Congress ,Trichy ,Parliament ,Union Government ,Congress of India ,Dinakaran ,
× RELATED திருச்சி ஸ்ரீரங்கத்தில் கழிவறை...