×

உடையார்பாளையம் அரசு பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசு

ஜெயங்கொண்டம், ஜூன் 24: உடையார்பாளையம் அரசு பள்ளியில் சிறப்பிடம்பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உடையார் பாளையம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 2024-2025ம் கல்வியாண்டில் 10,11,12ம் வகுப்பு மாணவிகளுக்கு கல்விஉதவித்தொகை, கேடயம், மெடல் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் முனைவர் முல்லைக்கொடி தலைமை வகித்தார். முன்னதாக உதவி தலைமை ஆசிரியர் இங்கர்சால் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேப்பெருமாள், கவுன்சிலர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.

உடையார்பாளையம் தக்ஷ்ரா கல்விஅறக்கட்டளை சார்பில் நிறுவனர் பொறியாளர் சிவக்குமார் கலந்துகொண்டு முதல் 10,11,12 வகுப்பில் முதல் 3 இடம் பெற்ற மாணவிகளுக்கு தொகை, கேடயம், மெடல் வழங்கினார். மாணவிகளிடம் தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் கல்வி பயிலவேண்டும். உங்கள் வாழ்வை வளமாக்கி சாதனை பெண்களாக சமுதாயம் போற்றி உயர்வடையச்செய்யும், அதனால் இந்த படிக்கிற காலத்தை வீனாக்கமல் வரும் கல்வியாண்டும் அரசுப்பொதுத்தேர்வில் அனைவரும் வெற்றி பெற்று மாநில அளவில் அதிக மதிப்பெண் எடுத்து இந்த ஊருக்கும், பள்ளிக்கும் பெறுமை சேர்க்கவேண்டும், மேலும் 100% சதவீதம் தேர்ச்சிபெற உழைத்த தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும், சத்துணவு பணியாளர்களுக்கும், சிறப்புசெய்து நினைவுபரிசு வழங்கிபாராட்டினார்.

நிகழ்வில் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் கொளஞ்சிநாதன், வேல்முருகன், செல்விசிவக்குமார், சுத்திகா, சஞ்சை, சந்தோஷ், நவின், ஆசிரியர்கள் செல்வராஜ், சாந்தி, மஞ்சுளா, தமிழரசி, காமராஜ், இராஜசேகரன், உடற்கல்வி ஆசிரியர் ஷாயின்ஷா கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தமிழாசிரியர் ராமலிங்கம் ஒருங்கிணைத்தார், நிறைவில் பாவைசங்கர் நன்றி கூறினார்.

The post உடையார்பாளையம் அரசு பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Udayarpalayam Government School ,Jayankondam ,Udayarpalayam Government Girls’ Higher Secondary School ,Principal ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...