×

இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி

குன்றத்தூர்: இளம்பெண், குளியலறையில் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபரை, பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை, போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவை சேர்ந்தவர் மணி அருள் (26). மாங்காடு அடுத்த கோவூரில் வாடகைக்கு வீடு எடுத்து, அதே பகுதியில் உள்ள தனியார் ஜல்லி, கலவை கலக்கும் கம்பெனியில் சூபர்வைசராக வேலை செய்கிறார். இந்நிலையில், நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண், அவரது வீட்டின் குளியலறையில் குளித்து கொண்டிருந்தார். இதை நோட்டமிட்ட மணிஅருள், அங்கு சென்று ஜன்னல் வழியாக தனது செல்போன் மூலம் அதை வீடியோ எடுத்தார். இதை பார்த்ததும், இளம்பெண் அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே மணிஅருள், அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால், பொதுமக்கள், அவரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். தகவலறிந்து மாங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்களின் பிடியில் இருந்த வாலிபரை, மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர், அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது உறுதியானது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். …

The post இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி appeared first on Dinakaran.

Tags : Kunradthur ,
× RELATED போரூர் அருகே ஹெல்மெட், லுங்கி அணிந்து...