×

வங்கி மோசடி : கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.143 கோடி சொத்துக்கள் முடக்கம்...அமலாக்கத்துறை அதிரடி

சென்னை: கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் ரூ.143 கோடி வங்கி டெபாசிட் கணக்கை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது. விஜய் மல்லையா, நீரவ் மோடிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் மிகப்பெரிய வங்கி மோசடியாக பார்க்கப்பட்டது, கனிஷ்க் ஜூவல்லரி நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ரூ.824 கோடி வங்கி மோசடி செய்ததாகும். கடந்த மார்ச் மாதம் எஸ்.பி.ஐ. வங்கி உள்பட 14  வங்கிகளிடம் கடன் வாங்கி விட்டு கனிஷ்க் திருப்பி செலுத்தவில்லை புகார் அளிக்கப்பட்டது. கனிஷ்க் நிறுவனம் ரூ.824 கோடி வங்கி மோசடி செய்ததாக கூறப்பட்டது. இதையடுத்து பூபேஷ் குமார் மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரத்தில் 2007ம் ஆண்டு தங்க நகை உற்பத்தி மையத்தை தொடங்கிய பூபேஷ், பல்வேறு பிரபல நகைக்கடைகள் மூலம் அந்த நகைகளை விற்பனை செய்து வந்துள்ளார். ஆனால் ஒவ்வொறு ஆண்டும் தவறான கணக்கை காட்டி, கையில் இருக்கும் இருப்பை அதிகமாக காட்டி வங்கியில் கடன்களை பெற்றுள்ளார். இந்த தகவல்கள் அனைத்தும் கடந்த 2017ம் ஆண்டு அம்பலமான நிலையில் எஸ்பிஐ வங்கி சிபிஐயிடம் புகார் அளித்தது. இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் சட்ட விரோதமாக பணப்பறிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறையும் ஒரு வழக்குப்பதிவு செய்தது.

இதனையடுத்து அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த விசாரணையின் அடிப்படையில் காஞ்சிபுரத்தில் உள்ள கனிஷ்க் நிறுவனத்துக்கு சொந்தமாக ரூ.48 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் ரூ.143 கோடி வங்கி டெபாசிட் அதிரடியாக முடக்கியுள்ளது. இந்நிலையில் வங்கி டெபாசிட் உடன் சேர்ந்து கனிஷ்க்-கின் ரூ.191 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்