×

ஆரணி பகுதிகளில் கடைகள், வீடுகளில் போதை பொருட்கள் பதுக்கி விற்பனை 4 பேர் அதிரடி கைது பெங்களூர், ஆந்திராவில் இருந்து கடத்தல்

ஆரணி, ஏப். 27: ஆரணி சுற்று வட்டார பகுதிகளில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக வடக்கு மண்டல ஐஜி தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ஐஜி உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் ஆரணி அடுத்த ராட்டிணமங்கலம், குண்ணத்தூர், சேவூர், சாணார்ப்பாளையம், அக்கூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள பங்க் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இந்த கிராமங்களில் உள்ள பங்க் கடைகளில் ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது. தொடர்ந்து, விசாரணையில், ராட்டிணமங்கலம் கிராமத்தை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் சங்கர்(42) என்பதும், இவருக்கு பெங்களூர், ஆந்திராவில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வந்து ஆரணி சுற்றுவட்டார பங்க்கடைகளுக்கு விற்பனை செய்து வந்த குண்ணத்தூரை சேர்ந்த யுவராஜ்(24), சாணார்ப்பாளையம், வெங்கடேசன் (65), ராஜாதேசிங்கு(44), என்பது தெரியவந்தது. தொடர்ந்து, தனிப்படை போலீசார் அவர்களின் மளிகை கடை, வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 15 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்து, அவர்கள் நான்குபேரை பிடித்து ஆரணி தாலுக்கா போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து, தாலுகா போலீஸ் எஸ்ஐ அருண்குமார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் நேற்று கைது செய்து, ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post ஆரணி பகுதிகளில் கடைகள், வீடுகளில் போதை பொருட்கள் பதுக்கி விற்பனை 4 பேர் அதிரடி கைது பெங்களூர், ஆந்திராவில் இருந்து கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Arani ,Northern Zone IG Special Task Force police ,Hans ,Gutka ,IG ,Special Task Force ,Arani, Bangalore, Andhra Pradesh ,
× RELATED மானுடத்தை நேசித்தவர் மகாகவி பாரதி...