×

அவிநாசியில் அஞ்சலக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதித்தமிழர் பேரவை கண்டன ஆர்ப்பாட்டம்

 

அவிநாசி, ஜூன் 16: அதிகார அத்துமீறலை நடத்தி வரும் ஒன்றியத்தில் ஆளும் பாஜ அரசைக் கண்டித்து ஆதித்தமிழர் பேரவை சார்பில், அவிநாசியில் அஞ்சலக அலுவலகம் முற்றுகை போராட்டம் மற்றும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாவட்டச்செயலாளர் அவிநாசி மணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தமிழ்மாறன் முன்னிலை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் விடுதலை செல்வன் ஆர்ப்பாட்டத்தை விளக்கி கோஷமிட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிதி செயலாளர் நடராஜன், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் டார்வின் கான் பியூஸ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா, மாவட்ட துணை செயலாளர் சின்னச்சாமி, மாவட்டத் துணைத் தலைவர் ஜானகி, அவிநாசி ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, மோகன், பிரபாகரன், லட்சுமணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

The post அவிநாசியில் அஞ்சலக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதித்தமிழர் பேரவை கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Adithamizhar ,BJP government ,
× RELATED பருவ மழையை எதிர்கொள்ள முன்னேற்பாடு