கீழக்கரை, ஜூலை 3: திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் சுமைதாங்கி அரசு ஆரம்பப் பள்ளியில் ‘வாட்டர் பெல்’ திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி பள்ளிக் கூடத்தில் காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 3 மணி என 3 முறை மணி ஒலித்து மாணவர்கள் தண்ணீர் குடிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்ய தண்ணீர் பருகுவதன் அவசியத்தை தலைமை ஆசிரியர் முனீஸ்வரி ஆசிரியர் நிர்மலா தேவி எடுத்துரைத்தனர்.
The post அரசு ஆரம்ப பள்ளியில் ‘வாட்டர் பெல்’ திட்டம் அமல் appeared first on Dinakaran.
