×

ஜோஷ்னா-தீபிகா வெள்ளி

ஸ்குவாஷ்  மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழக வீராங்கனைகள் ஜோஷ்னா  சின்னப்பா-தீபிகா பலிக்கல் ஜோடி, நியூசிலாந்தின் கிங்-முர்பே ஜோடியை  எதிர்த்து விளையாடியது. இதில், 9-11, 9-11 என்ற செட்களில் ஜோஷ்னா, தீபிகா  ஜோடி தோல்வி அடைந்து வெள்ளி வென்றது. இவர்கள் கடந்த 2014 காமன்வெல்த்தில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

பைனலில் ஸ்ரீகாந்த் தோல்வி
ஆண்கள்  ஒற்றையர் பிரிவு பேட்மின்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்,  மலேசியாவின் சாங்க் வெய் லீயை எதிர்த்து விளையாடினார். தரவரிசையில்  நம்பர்-1 வீரராகி சாதனை படைத்துள்ள ஸ்ரீகாந்த் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 21-19, 14-21, 14-21 என்ற கணக்கில் போராடி தோற்று வெள்ளியுடன்  ஆறுதல் அடைந்தார். காமன்வெல்த் விளையாட்டு ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் வெல்லும்  முதல் பதக்கம் இது.

Tags :
× RELATED சில்லிபாயின்ட்…