கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக மீண்டும் சிபிஐ விசாரணையை தொடங்கியது. 2025 செப்டம்பர் 27ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். சட்டமன்றத் தேர்தல் காரணமாக சிபிஐ விசாரணை நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது இந்த வழக்கின் விசாரணை மீண்டும் தொடங்கியது. இந்த துயர சம்பவத்தின்போது பணியில் இருந்த காவலர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.
