×

டீக் கடையில் தகராறு: 2 பேர் கைது

பெரம்பூர்: சென்னை நம்மாழ்வார்பேட்டை சந்தியப்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் கோபிநாத்(30). இவர் கார் டிரைவர். இவரது நண்பர்கள் வெங்கடேசன், பார்த்திபன் ஆகியோருடன் கடந்த 7ம்தேதி இரவு ஒத்தவாடை தெருவில் உள்ள டீக் கடைக்கு சென்றுள்ளார். அப்போது டீக்கடை உரிமையாளர் ஆறுமுகத்துடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறுமுகம், நண்பர் நாகராஜ் ஆகியோர் சேர்ந்து கோபிநாத், வெங்கடேசன், பார்த்திபன் ஆகியோரை தகாதவார்த்தையால் பேசியதுடன் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயம் அடைந்த மூவரும் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுசம்பந்தமாக கொடுத்த புகாரின்படி, தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார் வழக்குபதிவு செய்து ராமலிங்கபுரத்தை சேர்ந்த நாகராஜன் (49), ஆறுமுகம் (57) ஆகிய இருவரை கைது செய்தனர்.

Tags : Perampur ,Gopinath ,Santhiappan Street ,Chennai Nammalvarpet ,Venkatesan ,Parthipan ,Othawadi Street ,Aramug ,
× RELATED விவசாயியை வெட்டிக்கொன்ற ஏட்டுவின் கணவர் கைது