உதகை: உதகை அருகே சோலடா கிராமத்தில் தாயைப் பிரிந்து, 3 நாட்களாக தவித்த இரு புலிக் குட்டிகளை வனத்துறையினர் மீட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒரு புலிக்குட்டி உயிரிழந்துள்ளது. தாய்ப்புலி இன்னும் தென்படாததால் மற்றொரு புலிக்குட்டியை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
