- கவிதா
- முதல் அமைச்சர்
- சந்திர சேகரா
- தெலுங்கானா
- ஹைதெராபாத்
- கல்வகுண்டல கவிதா
- பாரத் ராஷ்ட்ரா சமிதி கட்சி
- தெலுங்கானா மாநில
ஹைதராபாத்: தெலுங்கானா அரசியலில் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் முக்கியத் தலைவரான கல்வகுந்த்லா கவிதா, புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தனது கட்சிக்கு ‘தெலுங்கானா மாநில சேனா’ என்று பெயரிட்டுள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இன்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை கட்சியின் தொடக்க விழாவாக நடத்தி, தனது புதிய அரசியல் பயணத்தை அவர் முறைப்படி தொடங்கினார். கடந்த காலத்திலிருந்த ‘தெலுங்கானா ராஷ்டிர சமிதி’ என்ற பெயருடன் இது ஒத்துப்போவது தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
புதிய கட்சி அறிவிப்பைத் தொடர்ந்து, மேட்சல் மாவட்டத்தின் உள்ள அத்வயா கன்வென்ஷன் பகுதி மக்கள் கடலாகக் காட்சியளித்தது. இந்த மாநாட்டிற்கு பெண்கள் மிக அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்தது சிறப்பம்சமாகும். கூட்ட அரங்கிற்கு வருகை தந்த கவிதா, தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் உற்சாக முழக்கங்களுக்கு இடையே மேடைக்கு வந்து அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மகளிர் அதிகாரம் மற்றும் தெலுங்கானாவின் உரிமைகளை மீட்டெடுப்பதே தனது கட்சியின் முதன்மை நோக்கம் என்பதை அவர் தனது வருகையின் மூலமே சூசகமாகத் தெரிவித்தார். மேடையில் கட்சியின் பெயரை அறிவித்தவுடன், கவிதா தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள் எழுப்பிய முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.
