மறைந்த நடிகையும், தயாரிப்பாளரும், இயக்குனருமான சாவித்திரியின் வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து, தெலுங்கில் நாக் அஸ்வின் எழுதி இயக்கிய படம், ‘மகாநடி’. தமிழில் இது ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. சாவித்திரி வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்திருந்த கீர்த்தி சுரேஷ், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். இதில் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா நடித்திருந்தனர். இப்படம் திரைக்கு வந்து 8 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து அவர் கூறுகையில், ‘என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான படம் என்றால், கண்டிப்பாக அது ‘மகாநடி’ படமாகத்தான் இருக்கும். இதில் மிகவும் வித்தியாசமான கேரக்டரில் நடித்தேன். அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. மிகவும் உணர்வுப்பூர்வமாகவும், மனதளவிலும் என்னை அந்த கேரக்டருக்காக அர்ப்பணித்தேன். ஒருகட்டத்தில் ஆழமாக அந்த கதாபாத்திரத்தில் மூழ்கி, கடைசியில் என்னையே அதில் தொலைத்துவிட்டேன்’ என்றார்.
