சென்னை: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தனது பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாக சகாயம் தரப்பு வழக்கு தொடர்ந்தது. பாதுகாப்பு வழங்க டிஜிபிக்கு உத்தரவிட்டு சகாயம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது
