- Abdulkalam
- இந்தியா
- அண்ணாமலை
- ராமேஸ்வரம்
- பாரத் ரத்னா
- டாக்டர்
- ஏபிஜே அப்துல் கலாம்
- தலைவர்கள் இயக்கம்
- கலாம்
- ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டம்
ராமேஸ்வரம்: பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 11-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வீ த லீடர்ஸ் (We The Leaders) இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள கலாமின் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தி, சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். இது தொடர்பாக அவர் சமூகவலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது:-
இன்றைய தினம், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள, உலகம் போற்றும் விஞ்ஞானிகளில் ஒருவரும், மக்களின் பேரன்பைப் பெற்றிருந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான, பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்தில், அவரது குடும்பத்தினருடன் இணைந்து நினைவஞ்சலி செலுத்தும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
“கனவு காணுங்கள்; அந்தக் கனவுகள் எண்ணங்களாக மாறட்டும், எண்ணங்கள் செயல்களாக மாறட்டும்” என்ற அவரது வாழ்வியல் தத்துவம், நமது இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக உள்ளது. இந்தியாவின் அறிவியல் முன்னேற்றம், தன்னம்பிக்கை மற்றும் இளைஞர்களின் கனவுகளுக்காக அவர் விதைத்த விதைகள், நம் தலைமுறைகளைத் தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.
வளர்ந்த இந்தியா என்ற அவரது கனவை நனவாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் உயர்ந்த லட்சியங்களைப் பின்பற்றி, வலிமையான, தன்னிறைவு பெற்ற, உலகிற்கு வழிகாட்டும் இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
