திண்டுக்கல்: பழனி கோயிலின் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து உட்பட 4 பேரிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி சின்னசாமி மற்றும் அறநிலையத்துறை ஆய்வாளர் சிவனேசனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து, ஓய்வுபெற்ற தாசில்தார் மாரியப்பனிடம் மற்றும் ஏற்கனவே நிலத்தை விற்பனை செய்த முருகதாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
