திருச்சி: திருச்சியில் மது வாங்கிவிட்டு ஒருவழிப்பாதையில் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரில் இருவர் விபத்தில் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொரு நபர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
