×

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா ஊழல் வழக்கை 12 வாரத்தில் விசாரித்து முடிக்க உத்தரவு

 

சென்னை: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா ஊழல் வழக்கை 12 வாரத்தில் விசாரித்து முடிக்க எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக சிபிஐ வழக்கு. வாக்குமூலம் தராதவர்களை சிபிஐ தரப்பு சாட்சி பட்டியலில் இருந்து நீக்க கோரி முன்னாள் ஆணையர் ஜார்ஜ் மனு அளித்தார். பதிவு செய்யப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்களை மனுதாரருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டதாக கூறி மனு தள்ளுபடி செய்தது.

Tags : Former Minister C. ,Vijayabaskar ,Chennai ,Former Minister ,C. MP ,M. L. A. ,Chennai High Court ,Former ,C. Vijayabaskar ,B. V. ,Ramadan ,
× RELATED தவெக அரசு மீது பாஜக மாநில தலைவர்...