சென்னை: தமிழகத்தில்12 மாநகராட்சிகளில் தூய்மை பணியை தனியார் மயமாக்கும் டெண்டர் ரத்து செய்யப்பட்டது. மதுரை, தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, கோவை உள்ளிட்ட 12 மாநகராட்சிகளுக்காக டெண்டர் கோரப்பட்டு இருந்தது. சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்வதற்காக விடப்பட்ட டெண்டரை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது.
