சரபங்காற்றில் ஆகாய தாமரையை அகற்ற வேண்டும்

இடைப்பாடி: சேலம் மாவட்ட ஏற்காடு அடிவாரத்தில் இருந்து ஓமலூர், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, வெள்ளாளபுரம், வேம்பனேரி, புதுப்பாளையம், தாதாபுரம், போடிநாயக்கன்பட்டி, இடைப்பாடி, நைனாம்பட்டி, ஆலச்சம்பாளையம், மோலானி முனியப்பன் கோயில் வழியாக, செட்டிப்பட்டி சரபங்காறு மயிலம்பட்டி, தேவூர் அண்ணமார் கோயிலில் காவிரி ஆற்றில் சரபங்கா நீர் கலக்கிறது.

இடைப்பாடி பஸ் நிலையத்தில் இருந்து கவுண்டம்பட்டி, வெள்ளாண்டிவலசை செல்லும் பாலவரை சரபங்காற்றில் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்து பச்சை பசேலென படர்ந்துள்ளது. இதனால் தண்ணீர் சேரும் சகதியும் ஆக மாறியுள்ளது. கடும் வெயிலால் நீர்மட்டம் குறைந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே ஆகாயத்தாமரை செடிகளை முழுவதும் அகற்ற வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் நீர்வளத்துறை, பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: