சென்னை: சேலத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். ‘நீட் தேர்வு பயத்தால் மாணவி கோபிகா தற்கொலை செய்து கொண்டது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. மருத்துவர் படிப்பு மட்டுமின்றி, அதுசார்ந்த பல்வேறு படிப்புகள் உள்ளதை தேர்வு செய்யாமல் விபரீத முடிவெடுப்பது தவறு. இனியும் இதுபோன்ற தவறான வழிக்கு எந்த மாணவ, மாணவியும் செல்லக் கூடாது என வலியுறுத்துகிறேன்’ என எடப்பாடி தெரிவித்துள்ளார்.
