நெல்லை: ஜாதி ரீதியிலான குழுவாக இருக்கும் மாணவர்களை வெவ்வேறு பள்ளிகளுக்கு மாற்ற நெல்லை ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் ஜாதி மோதலை தடுக்க ஆட்சியர் ஆனந்த் மோகன் நடவடிக்கை எடுத்துள்ளார். நடுக்கல்லூரில் செயல்படும் அரசுப் பள்ளியில் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் ஆணையிட்டுள்ளார்.
