சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த மக்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்திய குடியுரிமை வழங்க முந்தைய திமுக அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்காக மு.க.ஸ்டாலினிடம் நன்றி தெரிவித்தனர். இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்க நிரந்தர தீர்வு காண உதவுமாறும் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
