சென்னை: தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. சென்னையில் மீனம்பாக்கத்தில் 106 மற்றும் மீனம்பாக்கம் 104, திருத்தணி 106, மதுரை நகரம் 104, பாளையங்கோட்டையில் 101, கரூர் பரமத்தி, தஞ்சாவூர், மதுரை விமான நிலையத்தில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.

